Tuesday, April 2, 2013

எங்கு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் ?நான் அசிரியராக இருந்ததால் ,என்னுடைய ஆசிரியர்களை பற்றி ஆரம்பிப்பதுதான் சரியானதாக இருக்கும்.என் அம்மா ,அப்பாவிற்கு பிறகு ,என்னை சரியாக செதுக்கியவர்கள் அவர்களாகத்தான் இருக்க  முடியும் .நன்றி  சொல்லி  ஆரம்பிப்பது நன்றாக  இருக்கும்  என்ற  உணர்வுடன் ஆரம்பிக்கிறேன் .
                       முதல் வகுப்பு ஆசிரியரை  யாராலும் மறக்க முடியாது .நான் முதல் வகுப்பிலிருந்து  பள்ளி  இறுதி  வரை  வடலூர் ,வள்ளலார் குருகுலத்தில்  படித்தேன் .கிராமமும் இல்லாமல் ,நகரமும்  இல்லாமல் இடைப்பட்ட  ஒன்று .எல்லா வசதிகளும் இருந்த ஒரு அழகான பள்ளி அது .ஒரு பெரிய கிணற்றுக்கு முன் நீரை தேக்கிவைக்க ஒரு குளம் போன்ற கட்டமைப்பு இருந்தது .என் முதல்வகுப்பு ஆசிரியர் பெயர் திருமதி .ஜெயலக்ஷ்மி .-a  slender figure with aqualine nose .A black and so beautiful statured lady .அப்போ அதெல்லாம் தெரியாது .இருந்தாலும் எங்க டீச்சர் அழகானவங்க என்ற உணர்வு மட்டும் எப்போதும் இருந்தது .என்ன சொல்லிகொடுத்தாங்க சொல்லிகொடுத்தாங்க